For Daily Alerts
Just In
புதுவை: நாளை 2 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி அமைச்சரவையில் நாளை (புதன்கிழமை) மேலும் 2 அமைச்சர்கள் சேரவுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஏ. எழுமலை மற்றும் தமாகாவைச் சேர்ந்த ஏ. நமசிவாயம் ஆகியோர்தான் தற்போதுபுதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள அமைச்சர்கள்.
ராஜ் நிவாஸில் நாளை நடைபெறும் எளிய விழாவில், பாண்டிச்சேரி துணை நிலை ஆளுநரான டாக்டர் ரஜினி ராய்இந்த 2 அமைச்சர்களுக்கும் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
கடந்த அக்டோபர் 27ம் தேதி பதவியேற்ற ரங்கசாமி அரசு, ஏற்கனவே அவர் உள்பட எம். சந்திரகாசு, ஈ.வலசாராஜ், கே. லட்சுமிநாராயணன் ஆகிய 4 அமைச்சர்களைக் கொண்டுள்ளது.
இவர்கள் அனைவருமே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். இதனால் நாளை பதவியேற்கும் நமசிவாயம்தான்தமாகா சார்பில் அமைச்சராகும் முதல் நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Tuesday, February 5, 2002, 5:30 [IST]