அயோத்தி விவகாரம்: திமுக முடிவில் மாற்றம் இல்லை - கருணாநிதி
சென்னை:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் விவகாரத்தில் திமுக நிலையில் மாற்றம் எதுவும் இல்லை என்று திமுகதலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து கருணாநிதி இன்று (வியாழக்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:
அயோத்தியில் ராமர் கோவில் விவகாரத்தில் திமுக முடிவில் மாற்றம் எதுவும் இல்லை. பிரதமர் வாஜ்பாய் எடுத்தமுடிவை நான் பாராட்டுகிறேன்.
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் அகில இந்தியத் தலைவர் அசோக் சின்கால் என்னை சந்தித்ததாகவும், நான் அவருக்குபுத்தகம் கொடுத்ததாகவும் வெளியான தகவல் தவறானது.
அயோத்தி விவகாரம் குறித்து அசோக்சின்காலிடம் பேசுவதற்கு நான் விரும்பவில்லை. அவரும் இந்த விஷயத்தில்வற்புறத்தவும் இல்லை.
ஜெயலலிதாவை சந்தித்த பிறகு என்னைச் சந்திக்க வந்ததால்தான் நான் அவரை சந்திக்க விரும்பவில்லை என்றுஅவர் கூறியதும் தவறான தகவல். இதற்கு முன்பு எத்தனையோ தலைவர்கள் ஜெயலலிதாவைச் சந்தித்து விட்டுஎன்னைச் சந்தித்துப் பேசியுள்ளனர் என்று கருணாநிதி கூறினார்.
இலங்கையில் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்தால் தான் மிகவும்மகிழ்ச்சி அடையப் போவதாகவும் கருணாநிதி கூறினார்.