சரவணா ஸ்டோர்ஸ் பத்திரிக்கை அலுவலகத்தைத் தாக்கிய 4 பா.ம.கவினர் கைது
சென்னை:
சென்னை தி.நகர் பகுதியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் வார இதழ் அலுவலக தாக்குதல் தொடர்பாக பாட்டாளிமக்கள் கட்சியைச் சேர்ந்த 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் குறித்து இந்த வார இதழில் கட்டுரை வெளியாகியிருந்தது.இதைக் கண்டித்து ஒரு கும்பல் சில நாட்களுக்கு முன்பு தி.நிகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் வார இதழ்அலுவலகத்திற்குள் புகுந்து கடும் தாக்குதலில் ஈடுபட்டது.
இச்சம்பவத்தில், அலுவலகத்தில் இருந்த தொலைபேசிகள், பேக்ஸ் மெஷின்கள், கம்ப்யூட்டர்கள் சேதமடைந்தன.
இந்த சம்பவம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சுந்தர், சுரேஷ், ரமேஷ், ஸ்ரீனிவாசன் ஆகிய 4பேரை மாம்பலம் போலீஸார் கைது செய்துள்ளனர். இவர்களிடமிருந்து, தாக்குதலின்போது பயன்படுத்தியஆட்டோரிக்ஷா, ஆயுதங்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் இன்னும் 16 பேருக்குத் தொடர்பு உள்ளதாக கைதான நான்கு பேரும் போலீஸாரிடம்கூறியுள்ளனர். அவர்களையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.