For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதிய வீராணம் திட்டத்தை கைவிட ராமதாஸ் கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புதிய வீராணாம் திட்டத்தை நிறுத்தி விட்டு, கிருஷ்ணா நதி நீரை சென்னைக்கு கொண்டு வருவதற்கானநடவடிக்கைகளில் தமிழக அரசு இறங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார்.
இதுகுறித்து ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) நிருபர்களிடம் கூறியதாவது:

திமுக அறிமுகப்படுத்திய திட்டம் என்பதற்காகவே அதிமுக அரசு கிருஷ்ணா நதி நீர் திட்டத்தை விட்டு புதியவீராணம் திட்டத்தைக் கையில் எடுத்துள்ளது.

வீராணம் திட்டமும் 30 ஆண்டுகளுக்கு முன்பு திமுக வகுத்த திட்டம்தான். இப்போது ரூ.820 கோடிக்கு அந்ததிட்டத்தையே பெயர் மாற்றி புதிய வீராணம் என்று அதிமுக அரசு மாற்றியுள்ளது.

இந்தத் திட்டம் வீராணம் ஏரியிலிருந்து 1 டி.எம்.சி. தண்ணீர் பெறவே உதவும். மேலும் இந்த வீராணம் ஏரி,சென்னையிலிருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ளது.

கிருஷ்ணா நீர் திட்டமோ ஆண்டுக்கு 15 டி.எம்.சி. தண்ணீர் பெற உதவும். ஆனால் இந்தத் திட்டத்தின் மூலம்ஆண்டுக்கு 5 டி.எம்.சி. தண்ணீரே நாம் பெறுகிறோம். ஏன் இது குறித்து தமிழக அரசு இது வரை எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லை?

இது குறித்து தமிழக அரசு, ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி 15 டி.எம்.சி. தண்ணீரையும் பெற முயற்சிக்கவேண்டும்.

மேலும் ஈரோடு மாவட்டம் பள்ளிப்பாளையத்திலிருந்து ரூ.900 கோடி மூலம் தண்ணீர் பெறவும் அரசு முயற்சிக்கவேண்டும் என்று ராமதாஸ் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X