For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கிராமப் பகுதி மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ். சீட்: அரசு தீவிரம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மருத்துவக் கல்லூரிகளில் கிராமப் பகுதி மாணவர்களுக்கான இட ஒதுக்கீட்டை 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதுசெல்லாது என நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்படும் என முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.

இதுதொடர்பாக வழக்குத் தொடுத்திருந்த 6 மாணவர்களுக்கும் மருத்துவக் கல்லூரிகளில் அரசு இடம் வழங்கும் என்றார்.

ஆண்டிப்பட்டியில் தேர்தல் பிரசாரத்தை முடித்துக் கொண்ட பன்னீர் செல்வம் நேற்று சென்னை திரும்பினார். பிறகு அமைச்சரவைக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை அவர் சந்தித்தார்.

மத்திய அமைச்சராகப் பதவியேற்கும்போது தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டிக் காப்பேன் என உறுதிமொழி எடுத்துக் கொண்ட டி.ஆர். பாலுஆண்டிப்பட்டியில் ஜாதிப் பெயரைச் சொல்லி பிரச்சார் செய்து வருகிறார். குறிப்பாக எனது ஜாதிப் பெயரைச் சொல்லி முதல்வர் இந்தஜாதிக்காரர் என்று கூறி வருகிறார். இது குறித்து புகார் செய்வேன்.

தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம் ஆகிய மாவட்டங்களில் சமீபத்தில் பெய்த கன மழை காரணமாக 3 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்குபயிர்கள் சேதமடைந்துள்ளன. சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர்களின் அறிக்கைக்குப் பின் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

மழைச் சேதம் குறித்து உயர் அதிகாரிகள் கூட்டம் சென்னையில் தலைமைச் செயலாளர் சங்கர் தலைமையில் வருகிற 11ம் தேதி நடக்கிறதுஎன்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X