For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தேர்தலில் யாருக்கும் வாக்களிக்க மாட்டோம்: நல்லக்கண்ணு

By Super
Google Oneindia Tamil News

சென்னை:

ஆண்டிப்பட்டி தேர்தலில் எங்கள் கட்சியினர் யாரும் வாக்களிக்க மாட்டோம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமாநிலத் தலைவர் நல்லக்கண்ணு கூறியுள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில் கூறியதாவது:

சைதாப்பேட்டை, வாணியம்பாடி தொகுதிகளில் எந்த காரணத்துக்காக தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளிவைத்ததோ, அதை விட முறைகேடுகள் அதிகமாக ஆண்டிப்பட்டியில் நடந்துள்ளது.

முறைகேடுகள் அதிகம் நடந்துள்ள ஆண்டிப்பட்டியில் தேர்தலை நடத்துவது ஜனநாயகத்திற்கு விரோதமானது.

மேலும் அங்கு உண்மையான, நேர்மையான தேர்தல் நடைபெறாது. அதனாலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்,காங்கிரஸ், தமாகா போன்ற கட்சிகளோடு நாங்களும் தேர்தலைப் புறக்கணித்துள்ளோம்.

ஆண்டிப்பட்டி தேர்தலில் எங்கள் கட்சியினர் யாரையும் ஆதரிக்க மாட்டோம். யாருக்கும் வாக்களிக்கவும்மாட்டோம் என்று நல்லக்கண்ணு கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X