தஞ்சை ஆற்றில் பிடிபட்ட 55 கிலோ ராட்சத ஆமை
தஞ்சாவூர்:
தஞ்சாவூரில் உள்ள ஒரு ஆற்றில் 55 கிலோ எடையுள்ள ராட்சத ஆமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் புது ஆற்றில் இருபது கண் பாலத்தில் வழக்கம் போல் இளைஞர்கள் குளித்துக் கொண்டும், மீன் பிடித்துக்கொண்டும் இருந்தனர்.
அப்போது ஆற்றங்கரையோரம் ஒரு ராட்சத ஆமை நடமாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தனர். உடனே அங்கிருந்தஇளைஞர்கள் சாக்குப்பை வைத்து அந்த ஆமையை பிடித்தனர்.
உடனடியாக ஆமையைப்பற்றி வனத் துறையினருக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தஆமையின் எடை 55 கிலோ.
இந்த வகை ஆமை ஆழ்க்கடல் பகுதிகளில் தான் இருக்கும். சமீபத்தில் பெய்த கனமழையின் போது நாகப்பட்டினம்கடற்பகுதியிலிருந்து கல்லணை வழியாக இந்த ஆமை இங்கு வந்திருக்கலாம் என்று பொது மக்கள் கூறுகின்றனர்.
தஞ்சாவூர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் இருந்து மக்கள் இங்கு வந்து ஆச்சர்யத்தோடும், அதிசயத்துடனும் இந்தஆமையைப் பார்த்து விட்டுச் செல்கின்றனர்.