For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்முவில் ஊடுருவிய ஆளில்லா பாக். உளவு விமானம்

By Staff
Google Oneindia Tamil News

ஜம்மு:

ஜம்மு பகுதியில் உள்ள இந்திய வான்வெளியில் பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் ஒன்று இன்று(திங்கள்கிழமை) அத்துமீறிப் பறந்தது.

ஜம்முவின் ஆர்.எஸ். புரா பகுதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணிக்கு ஊடுருவிய இந்த பாகிஸ்தான் உளவுவிமானம் 2 நிமிடங்கள் மட்டுமே அப்பகுதியில் வட்டமிட்டது.

அதற்குள் அந்த உளவு விமானத்தை நோக்கி இந்தியப் பாதுகாப்புப் படையினர் விமான எதிர்ப்பு பீரங்கியால்சுட்டனர்.

ஆனால் 2,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் பறந்து கொண்டிருந்ததால், அந்த உளவு விமானம் மீண்டும்பாகிஸ்தானுக்கே தப்பிச் சென்று விட்டது.

கடந்த ஜனவரி 6ம் தேதி 2 பாகிஸ்தான் உளவு விமானங்கள் காஷ்மீரின் பூஞ்ச்சில் உள்ள இந்திய வான் பகுதியில்பறந்து சென்று பரபரப்பை ஏற்படுத்தின.

இந்தப் பரபரப்பு அடங்குவதற்கு முன்பாகவே ஜனவரி 9ம் தேதி மற்றொரு பாகிஸ்தான் உளவு விமானம் இந்தியஎல்லைக்குள் ஊடுருவிப் பறந்தது.

இந்நிலையில் கடந்த 5 வாரங்களில் 3வது முறையாக பாகிஸ்தான் உளவு விமானம் இந்திய வான் பகுதியில்பறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X