ஜெ.க்கு ஜாதி அமைப்புகளின் ஆதரவு குவிகிறது
சென்னை:
ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கப்போவதாக அகில இந்திய வ.உ.சி. பேரவை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வ.உ.சி. பேரவையின் தலைவர் லேனா முருகானந்தம் பிள்ளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:
வத்தலகுண்டு நகரில் சமீபத்தில் நடந்த பேரவை செயற்குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவின் வெற்றிக்கு அரும்பாடுபடுவது என்று அப்போது முடிவெடுக்கப்பட்டது என்றுமுருகானந்தம் கூறியுள்ளார்.
ஏற்கனவே பல்வேறு சிறு கட்சிகள், ஜாதி அமைப்புகள் தங்களது ஆதரவை ஜெயலலிதாவுக்குத் தெவித்து உள்ளதுகுறிப்பிடத்தக்கது. பல முக்குலத்தோர் ஜாதி அமைப்புகள் ஜெயலலிதாவுக்கு தங்களது ஆதரவைத் தெவித்துள்ளன.
மேலும் ஆண்டிப்பட்டி தொகுதியில் அதிகம் உள்ள ஜாதியான நாயுடு சமூக சங்கங்கள் பலவும் ஆதரவுதெவித்துள்ளன. இந்த நிலையில் மற்றொரு ஜாதி அமைப்பான வ.உ.சி. பேரவையும் தனது ஆதரவைத்தெவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.