For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்தோனேசியா வெள்ளம்: இந்தியா ரூ.100 கோடி உதவி

By Staff
Google Oneindia Tamil News

ஜகார்தா:

இந்தோனேசியாவில் சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும்பொருட்டு இந்தியா ரூ.100 கோடி நிதியுதவி அளிக்கவுள்ளது.

இந்தோனேசியாவில் சமீபத்தில் பெய்த கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினாலும் நிலச் சரிவினாலும் 12 பேர்உயிரிழந்தனர்.

இது தொடர்பாக இந்தோனேசிய ஜனாதிபதி மேகாவதிக்கு இந்தியப் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் நேற்று ஒருகடிதம் எழுதியுள்ளார்.

வெள்ளத்தால் இறந்து போனவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை அக்கடிதத்தில் தெரிவித்துள்ளவாஜ்பாய், இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரூ.100 கோடியை இந்தோனேசியாவுக்கு வெள்ளநிவாரண நிதியாக அனுப்பப் போவதாகவும் கூறியுள்ளார்.

அதன்படி இந்தோனேசியாவின் தேவைக்கேற்ப ரூ.100 கோடி மதிப்புள்ள மருந்துப் பொருட்கள் உள்பட பலநிவாரணப் பொருட்கள் அங்கு அனுப்பப்படும்.

அமெரிக்கா, கனடா மற்றும் டென்மார்க் ஆகிய 3 நாடுகளும் இந்தோனிசியாவிற்கு வெள்ள நிவாரண உதவிகளைஅளிக்கப் போவதாக ஏற்கனவே அறிவித்துள்ளன.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X