For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மாதிரி பட்ஜெட்டை தமிழக அரசு வெளியிட ராமதாஸ் வற்புறுத்தல்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆண்டிப்பட்டி தேர்தலுக்குப் பிறகும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரத் திட்டம் தொடரும் என்றும் ரேஷன்பொருட்களின் விலை உயராது என்றும் ஜெயலலிதா கூறுவது உண்மையானால் அதிமுக அரசு உடனடியாக மாதிரிபட்ஜெட் ஒன்றை வெளியிட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னையில் ராமதாஸ் இன்று வெளியிட்டள்ள ஒரு அறிக்கையில் கூறியுள்ளதாவது:

எப்போதுமே மாதிரி பட்ஜெட்டை வெளியிடுவது ஒரு அரசின் கடமையாகும்.

ஆந்திரப் பிரதேச அரசு கூட தற்போது மாதிரி பட்ஜெட்டை வெளியிட்டுள்ளது. அந்த மாதிரி பட்ஜெட் குறித்தவிவாதங்கள் தற்போது அங்கு சூடுபிடித்துள்ளன.

இத்தகைய மாதிரி பட்ஜெட்டை தமிழக அரசு வெளியிடத் தயாரில்லை என்றால் ஜெயலலிதாவின் தேர்தல்வாக்குறுதிகள் மக்களை ஏமாற்றுவதற்காகத்தான் என்றே அர்த்தம்.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் என்றால் பம்பு செட்டுகளில் மீட்டர் பொறுத்த வேண்டிய அவசியம்என்ன என்று அவ்வறிக்கையில் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X