For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போர்நிறுத்தம்: மக்கள் நலன் குறித்து சந்திரிகா கவலை

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:


இலங்கையில் நிரந்தரப் போர்நிறுத்தத்தின்போது பொதுமக்களின் உரிமைகள் பாதுகாப்பு குறித்து கவலைஅடைந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.

பொதுமக்களுக்கும் குழந்தைகளுக்கும் தற்போது அளிக்கப்பட்டு வரும் உரிமைகளும் பாதுகாப்பும் நிரந்தரப்போர்நிறுத்தத்திற்குப் பிறகும் அவர்களுக்குத் தொடர்ந்து கிடைக்குமா என்று சந்திரிகா கேள்வி எழுப்பியுள்ளதாகஅவருடைய செய்தித் தொடர்பாளர் ஹரிம் பெய்ரிஸ் இன்று (வியாழக்கிழமை) கூறினார்.

ஆனால் அமைதி நடவடிக்கைகளுக்கு சந்திரிகா தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார் என்றும்பெய்ரிஸ் கூறினார்.

நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சந்திரிகா கையெழுத்திடுவாரா என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, இறுதிஒப்பந்தம் தயார் செய்யப்படாதவரையில் இந்தக் கேள்விக்கு இப்போது பதிலளிக்க முடியாது என்றார் பெய்ரிஸ்.

நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சந்திரிகா கையெழுத்திட்டால்தான் தானும் கையெழுத்திடப் போவதாக கடந்தவாரம் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X