For Daily Alerts
Just In
போர்நிறுத்தம்: மக்கள் நலன் குறித்து சந்திரிகா கவலை
கொழும்பு:
இலங்கையில் நிரந்தரப் போர்நிறுத்தத்தின்போது பொதுமக்களின் உரிமைகள் பாதுகாப்பு குறித்து கவலைஅடைந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் சந்திரிகா குமாரதுங்கா கூறியுள்ளார்.
ஆனால் அமைதி நடவடிக்கைகளுக்கு சந்திரிகா தன்னுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளார் என்றும்பெய்ரிஸ் கூறினார்.
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சந்திரிகா கையெழுத்திடுவாரா என்ற ஒரு நிருபரின் கேள்விக்கு, இறுதிஒப்பந்தம் தயார் செய்யப்படாதவரையில் இந்தக் கேள்விக்கு இப்போது பதிலளிக்க முடியாது என்றார் பெய்ரிஸ்.
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் சந்திரிகா கையெழுத்திட்டால்தான் தானும் கையெழுத்திடப் போவதாக கடந்தவாரம் விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Thursday, February 14, 2002, 5:30 [IST]