For Daily Alerts
Just In
புதுவையில் புதிய அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியில் சமீபத்தில் பதவியேற்ற 2 புதிய அமைச்சர்களுக்கும் ஒரு வழியாக இலாகாக்கள்ஒதுக்கப்பட்டுவிட்டன.
கடந்த 6ம் தேதி பதவியேற்ற காங்கிரசின் எழுமலைக்கும் தமாகாவின் நமசிவாயத்துக்கும் இலாகாக்களைஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது.
இதையடுத்து அவர்கள் பதவியேற்றும் பொறுப்புக்களை ஏற்க முடியாமல் தவித்து வந்தனர்.
இந்நிலையில் எழுமலைக்கு போக்குவரத்து, உணவு மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி ஆகிய துறைகள்ஒதுக்கப்பட்டுள்ளன.
விவசாயம், வனத் துறை, கால்நடைத் துறை மற்றும் வீட்டுவசதித் துறை ஆகியவை நமசிவாயத்துக்குவழங்கப்பட்டுள்ளன.
பாண்டிச்சேரி அரசு வெளியிட்டள்ள செய்திக் குறிப்பு ஒன்றில் இத்தகவல் கூறப்பட்டுள்ளது.
Comments
Story first published: Thursday, February 14, 2002, 5:30 [IST]