For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆண்டிப்பட்டி வாக்காளர்களின் விரல்களில் 2 முறை அடையாள மை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் வாக்களிப்பவர்களின் இடது கை விரலில் 2 முறை அடையாள மை வைக்கப்படும்என்று தமிழக தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி கூறியுள்ளார்.

ஆண்டிப்பட்டி இடைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து சென்னையில் சாரங்கி இன்று (வெள்ளிக்கிழமை)நிருபர்களிடம் கூறியதாவது:

ஆண்டிப்பட்டி தேர்தலில் வாக்களிக்கும் வாக்காளர்களுக்கு இடது கை விரலில் 2 முறை அடையாள மைவைக்கப்படும்.

வாக்காளர்கள் வாக்களிக்க வரும் போது வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு, டிரைவிங் லைசென்ஸ்,வங்கி பாஸ் புக், டெலிபோன் பில் உள்ளிட்ட 16 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை அடையாளத்துக்கு எடுத்து வரவேண்டும்.

ஆண்டிப்பட்டியில் தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் நடந்து வருகின்றன. இத்தொகுதியில் 216வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 2 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படும். இவை தவிர ஒருகட்டுப்பாடும் இயந்திரமும் பயன்படுத்தப்படும் என்று சாரங்கி கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X