For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நிருபரை விடுவிக்கக் கோரி மனைவி மீண்டும் உருக்கம்

By Staff
Google Oneindia Tamil News

கராச்சி:

அமெரிக்காவின் "வால் ஸ்ட்ரீட்" பத்திரிக்கையின் நிருபரான டேனியல் பேர்லை விடுவிக்க வேண்டும் என்றுஅவருடைய கர்ப்பிணி மனைவியான மரியான் பேர்ல் கடத்தல்காரர்களிடம் மீண்டும் உருக்கமாக வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இன்னும் பிறக்காத தங்களின் குழந்தைக்காகவாவது டேனியலை விடுதலை செய்ய வேண்டும் என்று மரியான்கோரியுள்ளார்.

அல்லது என்னுடைய கணவர் எப்படி இருக்கிறார் என்பதையாவது எனக்குத் தெரியப்படுத்துங்கள் என்றும்டேனியலின் மனைவி கண்ணீருடன் கடத்தல்காரர்களுக்கு ஒரு அறிக்கை மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதற்கிடையே டேனியலைத் தேடி கராச்சியின் பல்வேறு இடங்களிலும் வெகு தீவிரமாகப் பாகிஸ்தான் போலீசார்சோதனை செய்து வருகின்றனர்.

டேனியல் கடத்தல் தொடர்பாக மேலும் 6 பேரைக் கைது செய்துள்ளதாகப் போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில் டேனியல் இறந்து விட்டதாக சமீபத்தில் கைதான ஷேக் ஒமர் கூறியதை நம்புவதற்குப் பாகிஸ்தான்போலீசார் மறுத்துள்ளனர்.

டேனியல் இறந்து விட்டாரென்றால், அவரைக் கொன்றது யார் என்ற கேள்விக்கும் அவருடைய உடல் எங்கே என்றகேள்விக்கும் ஷேக் ஒமரால் பதில் சொல்ல முடியவில்லை என்று போலீசார் கூறினர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X