For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இன்று குஜராத் நீதிமன்றத்தில் அன்சாரி ஆஜர்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

கொல்கத்தா அமெரிக்க மையம் தாக்குதலுக்கு முக்கிய காரணமான அப்தாப் அன்சாரியை சி.பி.ஐ. போலீசார்குஜராத் நீதிமன்றத்துக்கு கொண்டு சென்றனர்.

சில தினங்களுக்கு முன்பு கொல்கத்தா அமெரிக்க மையம் தாக்கப்பட்டதில் முக்கிய குற்றவாளியான அன்சாரியைதுபாய் போலீசார் கைது செய்து சி.பி.ஐ. போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

சி.பி.ஐ. போலீசார் அவனை டெல்லி பெருநகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி காமினி லா, அவனை 7நாட்கள் சி.பி.ஐ. காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையின் முடிவில் அவனை குஜராத் மாவட்டம்ரதன்பூர் நீதிமன்றத்தில் 16ம் தேதி மாலை 4 மணிக்குள் ஆஜர் படுத்துமாறும் உத்தரவிட்டார்.

கடந்த வருடம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் வைத்திருந்ததாக சி.பி.ஐ. போலீசார் இவன் மீதுகுற்றப்பத்திரிக்கை பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பாக குஜராத்தில் உள்ள ரதன்பூர் நீதிமன்றத்தில்அன்சாரியை இன்று சி.பி.ஐ. போலீசார் ஆஜர் படுத்துகின்றனர்.

இதனால் ரதாம்பூர் நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கொல்கத்தா அமெரிக்க மையத்தைதாக்குவதற்கு நிதி கொடுத்தவர்கள் தொடர்பாகவும், ஆயுதம் கடத்தியது தொடர்பாகவும் விசாரிக்க மேலும் 7நாட்கள் அனுமதி கோர உள்ளனர் சி.பி.ஐ. போலீசார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X