For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புளுபிலிம் டாக்டர் படத்தில் நடித்த 50 பெண்கள் வாக்குமூலம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

புளுபிலிம் டாக்டர் பிரகாஷின் படங்களில் நடித்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் போலீசாரிடம் ரகசியமாய்வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இவரது மருத்துவமனையில் பணியாற்றி பல புளுபிலம்களில் நடித்த நர்ஸ் சித்ரா சமீபத்தில் செங்கல்பட்டுநீதிமன்றத்தில் ஆஜரானார். இவரை விசாரித்தால் பிரகாஷ் குறித்த முழு விவரங்களும் தெரியவரும் என்பதால்அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என போலீசார் கோரினர்.

இதையடுத்து சித்ராவை 9 நாள் போலீஸ் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து அவர்போலீசாரால் விசாரிக்கப்பட உள்ளார்.

இவரை விசாரிக்க பெண் இன்ஸ்பெக்டர் தலைமையில் ஒரு தனி விசாரணைக் குழுவை காவல்துறைஅமைத்துள்ளது. இந்தக் குழுவினர் சித்ராவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்கவுள்ளனர்.

இந் நிலையில் பிரகாஷின் புளு பிலிம்களில் தெரிந்தோ தெரியாமலோ சிக்கிய பெண்களும் ஆண்களும்போலீசாரை சந்தித்து வாக்குமூலம் அளிக்க ஆரம்பித்துள்ளனர். இதுவரை 50க்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்என்பது போலீசாருக்கே அதிர்ச்சியளித்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X