For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை மியூசியத்தில் புத்தர் சிலையின் தலை மாயம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்த பழமைவாய்ந்த புத்தர் சிலையின் தலையை யாரோ சிலர்துண்டித்து எடுத்துச் சென்று விட்டனர்.

சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் பழமை வாய்ந்த சிலைகள் மற்றும் சில அபூர்வ பொருட்கள்உள்ளன. சென்னைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு வந்து பார்வையிடுவது வழக்கம்.

இங்கு 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த புத்தர் சிலை ஒன்று உள்ளது. சுமார் 6 அடி உயரமுள்ள இந்த சிலை சுண்ணாம்புக்கல்லால் ஆனது. இது மிகவும் பழமை வாய்ந்தது. இதன் மதிப்பு சில லட்ச ரூபாய் தேறும்.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு இந்தப் புத்தர் சிலையின் தலையை யாரோ சிலர் துண்டித்து எடுத்துச் சென்றுவிட்டனர். இது குறித்து அருங்காட்சியக அதிகாரிகள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த சிலையைப் பார்வையிட வந்த யாரோ தான் துண்டித்து எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்றுஅருங்காட்சியக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

போலீசார் வழக்குப் பதிவு செய்து, தனிப்படை அமைத்து இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களைத் தேடி வருகின்றனர்.

அருங்காட்சியக ஊழியர்கள் சிலருக்கு இச்சம்பவத்தில் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சென்னை மெரீனா கடற்கரையிலிருந்து சமீபத்தில் அகற்றப்பட்ட கண்ணகி சிலையும் இந்தஅருங்காட்சியகத்தில்தான் வைக்கப்பட்டிருப்பதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது நினைவு கூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X