For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிஜி: ஆட்சியை கைப்பற்றிய ஜார்ஜ் ஸ்பைட்டுக்கு ஆயுள்

By Staff
Google Oneindia Tamil News

சுவா:

George Speightகடந்த மே 2000ல் பிஜி நாட்டியில் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த மகேந்திர செளத்ரி தலைமையிலானஆட்சியைக் கவிழ்த்த ஜார்ஜ் ஸ்பைட்டுக்கு இன்று (திங்கள்கிழமை) அந்நாட்டு உயர் நீதிமன்றம் வழங்கிய தூக்குத்தண்டனையை அந்நாட்டு அதிபர் ஜோசபோ இலோய்லோ ஆயுள் தண்டனையாகக் குறைக்க உத்தரவிட்டார்.

தெற்கு பசிபிக் கடலில் உள்ள சிறிய தீவு பிஜி. இந்திய வம்சாவழியினர் பெருமளவில் வசித்து வருகின்றனர்.இவர்களுக்கும் பிஜியைத் தாயகமாகக் கொண்டவர்களுக்கும் இடையே காலம்காலமாக பிரச்சினை இருந்துவருகிறது.

கடந்த 2000ம் ஆண்டு மே 19ம் தேதி பிரதமர் மகேந்திர செளத்ரியின் மாளிகை முன்பு ஆயிரக்கணக்கான பிஜிஇனத்தவர்கள் கூடி, அவருக்கு எதிராக கோஷம் இட்டனர்.

மறுபுறம் ஆயுதம் தாங்கிய புரட்சிக்காரர்கள் பிரதமர் மாளிகையைச் சுற்றி வளைத்து, செளத்ரியை வீட்டுக் காவலில்வைத்தனர். பின்னர் பிஜி நாடாளுமன்றத்துக்குள்ளும் புகுந்த புரட்சிக்காரர்களில் ஒரு பிரிவினர் அமைச்சர்கள்மற்றும் எம்.பிக்களின் அறைகளை பூட்டி சீல் வைத்தனர்.

புரட்சிக்காரர்களின் தலைவரான ஜார்ஜ் ஸ்பைட், பிஜி இனத்தவர் ஒவ்வொருவரின் சார்பிலும் நான் இந்த நாட்டின்ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளேன். விரைவில் அரசியல் சட்டம் திருத்தப்படும். இடைக்கால அரசும்நிறுவப்படும் என்றார்.

அப்போதைய எதிர்க் கட்சித் தலைவர் சாம் ஸ்பைட்டின் மகனான ஜார்ஜ் ஸ்பைட், மொத்தம் 56 நாட்கள்செளத்ரியையும் அவருடைய அமைச்சர்களையும் வீட்டுக் காவலில் வைத்திருந்தார்.

இதையடுத்து பிஜி ராணுவத்தினர் பிரதமர் மாளிகையையும் நாடாளுமன்றத்தையும் முற்றுகையிட்டு,செளத்ரியையும் அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்களையும் மீட்டனர்.

பிரதமரையும் அமைச்சர்களையும் வீட்டுக் காவலில் வைத்து ஆட்சியைத் தம் கையில் எடுத்துக் கொண்டதுதொடர்பாக ஜார்ஜ் ஸ்பைட் உள்பட 12 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.

கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. ஜார்ஜ்ஸ்பைட்டுக்கு தூக்குத் தண்டனை வழங்கிய நீதிபதி மைக்கேல் ஸ்காட், அவரைச் சாகும்வரை தூக்கிலிட வேண்டும்என்றும் உத்தரவிட்டார்.

தீர்ப்பைக் கேட்டதும் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்த ஜார்ஜ் ஸ்பைட்டின் மனைவி கதறி அழுதார். ஆனால்அருகிலிருந்த ஜார்ஜ் ஸ்பைட்டோ எந்தவொரு உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் அமைதியாக இருந்தார்.

தன்னுடைய ஆதரவாளர்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்ட ஜார்ஜ் ஸ்பைட், பின்னர்உடனடியாக கோர்ட்டிலிருந்து சிறைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கிடையே ஜார்ஜ் ஸ்பைட்டிற்கு விதிக்கப்பட்டுள்ள இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக்குறைக்க வேண்டும் என்று அவருடைய வழக்கறிஞரான ரோன் கேனான் அந்நாட்டு ஜனாதிபதியிடம் கோரிக்கைமனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதையடுத்து ஜார்ஜ் ஸ்பைட்டுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்கும்உத்தரவில் ஜனாதிபதி ஜோசபோ இலோய்லோ கையெழுத்திட்டுள்ளதாக அட்டார்னி ஜெனரல் கோரினியாசி பாலேஇன்று பிற்பகல் கூறினார்.

பிஜி நாட்டைப் பொறுத்தவரை ஆயுள் தண்டனை பெற்றவர்கள் சுமார் 10 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனைபெற்றுவிட்டு வெளியே வந்து விடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X