For Daily Alerts
Just In
சென்னையில் ரூ.5 லட்சம் மதிப்பு போலி மது பாட்டில்கள் பறிமுதல்
சென்னை:
சென்னையில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள போலி மது பாட்டில்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர்.
சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு காலனியில் ஒருவர் போலி மதுவை விற்பதாகப் போலீசாருக்குத் தகவல் வந்தது.
இதையடுத்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு அந்தக் காலனிக்குச் சென்ற போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது ஒரு வீட்டில் ஏராளமான போலி மது பாட்டில்கள் இருப்பதைப் போலீசார் கண்டுபிடித்தனர்.
கள்ளத்தனமான இந்த மது பாட்டில்களை விற்று வந்த நபர், போலீசார் வருவதைத் தெரிந்ததும் தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் அந்த போலி மது பாட்டில்களைப் பறிமுதல் செய்த போலீசார், அதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்றுதெரிவித்தனர்.
Comments
Story first published: Monday, February 18, 2002, 5:30 [IST]