ராமர் கோவிலருகில் மசூதி கட்டலாம்: ஆர்.எஸ்.எஸ்.
நாக்பூர்:
கட்டப்படவுள்ள ராமர் கோவிலுக்கு அருகிலேயே ஒரு மசூதியைக் கட்டிக் கொள்ளலாம் என்று ஆர்.எஸ்.எஸ்.அமைப்பு கூறியுள்ளது.
இது தொடர்பாக நாங்கள் முஸ்லீம்களுடன் பேசத் தயாராக உள்ளோம் என்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின்செய்தித் தொடர்பாளரான எம்.ஜி. வைத்யா நிருபர்களிடம் தெரிவித்தார்.
ராமர் கோவிலுக்கு வெகு அருகிலேயே உள்ள சரயு நதியின் கரையில் முஸ்லீம்கள் தங்கள் மசூதியைக் கட்டிக்கொள்ளலாம் என்றும் இதுகுறித்து முஸ்லீம்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் வைத்யா கூறினார்.
கடந்த 1992ல் இடிக்கப்பட்ட பாபர் மசூதிக்குப் பதிலாக வேறொரு மசூதி கட்டித் தரப்படும் என்று காங்கிரஸ்,சமாஜ்வாடி கட்சிகள் உள்பட எந்த ஒரு கட்சியுமே வாக்குறுதி அளிக்கவில்லை என்றும் வைத்யா குற்றம்சாட்டினார்.
மேலும் ராமர் கோவில் கட்டுவது தொடர்பாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைமைக் கட்சியான பாஜகவுக்குநாங்கள் எந்தவிதமான மிரட்டலையும் விடுக்கவில்லை என்றும் வைத்யா தெரிவித்தார். பாஜகவின் ரிமோட்கன்ட்ரோல் ஆர்.எஸ்.எஸ்தான் என்ற கருத்தையும் அவர் மறுத்தார்.
வரும் மார்ச் 15ம் தேதிக்குப் பிறகு ராமர் கோவிலின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகும் என்று விஸ்வ ஹிந்துபரிஷத் (வி.எச்.பி.) அமைப்பு தெரிவித்துள்ள போதிலும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தங்கள் நிலையைக்கூறவில்லை.
பெங்களூரில் வரும் மார்ச் 15 முதல் 17 வரை நடைபெறும் தங்கள் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்திற்குப் பிறகுதங்கள் நிலையை அறிவிக்கப் போவதாகவும் ஆர்.எஸ்.எஸ். கூறியுள்ளது.
ஆர்.எஸ்.எஸ். தலைவரின் பாதுகாப்பு அதிகாரி மரணம்:
இதற்கிடையே ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் முக்கிய தலைவர் ராஜ்ஜூ பய்யாவின் பாதுகாப்பு அதிகாரியானவீரேந்திர சிங் டெல்லியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். இயக்க அலுவலகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
டெல்லி மாநகர போலீஸ் கான்ஸ்டபிளுமான சிங், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு 11.30 மணிக்கு மத்தியடெல்லியின் ஜான்டேவாலாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்தில் பாதுகாப்பு வீரர்கள் அறையில் இறந்துகிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அவருடைய அருகிலேயே அவரது துப்பாக்கி இருந்தது. அவருடைய இடது கண்ணில் குண்டு பாய்ந்துள்ளது. அதுதற்கொலையாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
இருப்பினும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அது கொலையா அல்லது தற்கொலையா என்பது பற்றிவிசாரணை நடத்தி வருகின்றனர்.