இன்று மாலை 5 மணிக்குப் பின் பிரச்சாரம் செய்தால் 2 ஆண்டு சிறை
சென்னை:
ஆண்டிப்பட்டி தொகுதியில் இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குப் பின் பிரச்சாரம் செய்பவர்களுக்கு 2ஆண்டு சிறை விதிக்கப்படும் என்று தமிழக தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி கூறினார்.
ஆண்டிப்பட்டியில் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. இந்த நேரத்திலிருந்து தேர்தல்முடிவடையவுள்ள 21ம் தேதி மாலை 5.30 மணி வரை இத்தொகுதியில் யாரும் தேர்தல் பிரச்சாரம் செய்யக் கூடாதுஎன்று சாரங்கி எச்சரித்துள்ளார்.
இந்த 48 மணி நேரத்தில் ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பொதுக்கூட்டம் நடத்தவோஊர்வலம் செல்லவோ கூடாது என்றும் சாரங்கி கூறியுள்ளார்.
மேலும் இசை, நாடகம், திரைப்படம், தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் மின்னணு சாதனங்கள் மூலமாகவும் இந்தக்குறிப்பிட்ட நேரத்தில் யாரும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடக் கூடாது என்றும் சாரங்கி எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையை மீறிப் பிரச்சாரம் செய்பவர்கள் மீது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்கீழ் கடுமையானநடவடிக்கை எடுக்கப்பட்டு, அவர்களை 2 ஆண்டுகள் சிறையில் தள்ளவும் முடியும் என்றும் சாரங்கி கூறினார்.