"செக்ஸ்" டாக்டர் பிரகாஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சென்னை:
"செக்ஸ்" டாக்டர் பிரகாஷ், குண்டர்கள் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவரால் ஒருவருடத்திற்கு சிறையிலிருந்து வெளியே வர முடியாது.
வெப்சைட்கள் மூலம் ஆபாசப் படங்களையும், ஆபாச சிடிக்களையும் விற்றதாகவும், பெண்களை வைத்துவிபச்சாரம் நடத்தியதாகவும் சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த டாக்டர் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்போது அவரை குண்டர்கள் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளதாக சென்னை நகர காவல்துறை தெரிவித்துள்ளது.
பொது அமைதி, நலனுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் டாக்டர் பிரகாஷ் செயல்பட்டுள்ளதால் குண்டர்சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கிறது.
டாக்டர் பிரகாஷின் செயல்பாடுகள், பொதுமக்களின் குறிப்பாக இளம் பெண்களின் மனதில் பயத்தை விளைவித்துவிட்டது, மன அமைதியைப் பறித்து விட்டது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குண்டர் சட்டத்தின் கீழ் பிரகாஷ் கைது செய்யப்பட்டுள்ளதால் அவர் ஒரு வருடத்திற்கு சிறையில்அடைக்கப்படுவார். ஜாமீனில் கூட அவரால் வெளி வர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.