For Quick Alerts
For Daily Alerts
Just In
போலீஸ் பயத்தில் மக்கள்: கிருஷ்ணசாமி கூறுகிறார்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் எந்தப் பக்கம் பார்த்தாலும் காக்கிச் சட்டைகளாக இருப்பதால் மக்களுக்கு போலீஸ் பயம்வந்துவிட்டது என புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.
ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் இவர் ஆண்டிப்பட்டியில் முகாமிட்டு தொகுதியின் பல்வேறு வாக்குச்சாவடிகளை சுற்றி வருகிறார்.
அவர் கூறுகையில், பாதுகாப்பு என்ற பெயரில் எங்கு பார்த்தாலும் போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுபின்தங்கிய மக்களிடையே கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
Comments
admk vote karunanidhi jayalalitha election voters thatstamil victory tamilnadu andipatti tamil news crpf vaigai sekar
Story first published: Thursday, February 21, 2002, 5:30 [IST]