For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இதுவரை 45 சதவீதம் வாக்குப் பதிவு

By Staff
Google Oneindia Tamil News

ஆண்டிப்பட்டி:

ஆண்டிப்பட்டியில் வாக்குப் பதிவு தொடங்கிய 4 மணி நேரத்தில் சுமார் 45 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. 10 மணி வரை சுமார் 24,000 வாக்குகள் பதிவாகின. இது மொத்தவாக்குகளில் சுமார் 12 சதவீதமாகும். தொடர்ந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம்கூட்டமாக வந்து வாக்களித்த வண்ணம் உள்ளனர்.

12 மணிக்கே 45 சதவீத வாக்குகள் பதிவாகிவிட்டன. சில வாக்குச் சாவடிகளில் 50 சதவீத வாக்குகள் கூடபதிவாகிவிட்டன.

இதுவரை இல்லாத அளவுக்கு ஆண்டிப்பட்டியில் மிக அதிகமான வாக்குப் பதிவு இருக்கும் என்று தெரிகிறது.பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருப்பதால் பெரும் அளவில் வாக்குப் பதிவு இருப்பதாகக் கருதப்படுகிறது.

கடைசி நேரத்தில் கூட வாக்காளர்களைக் கவர அதிமுகவினரும் திமுகவினரும் கடுமையாகப் போட்டியிட்டுவருகின்றனர்.

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, பாலசமுத்திரம் என்ற இடத்தில் தனது ஆதரவாளர்களுடன்அமர்ந்து வாக்களிக்க வருபவர்களை திமுகவுக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆண்டிப்பட்டி தேர்தலை கவர் செய்ய இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகளின்நிருபர்கள் குவிந்துள்ளனர். கட்சிக்காரக்கள், போலீஸ் வாகனங்களுக்கு இணையாக நிருபர்களின் வாகனங்களும்ஆண்டிப்பட்டியை சுற்றி வந்து கொண்டுள்ளன.

பி.பி.சி. நிறுவனம் கூட தனது நிருபரை ஆண்டிப்பட்டிக்கு அனுப்பி வைத்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X