வைகை சேகருக்கு எதிராக அதிமுகவினர் கோஷம்: வாக்குச் சாவடியில் பரபரப்பு
ஆண்டிப்பட்டி:
திமுக வேட்பாளர் வைகை சேகர் வாக்களிக்க வந்தபோது அவருக்கு எதிராக அதிமுகவினர் கோஷம்எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிடும் திமுக வேட்பாளரான வைகை சேகர் வைகைப் புதூர் பகுதியில் உள்ளவாக்குச் சாவடியில் வாக்களிக்க வந்தார். முதல் ஆளாக வந்த சேகருக்கு எதிராக அங்கு இருந்த அதிமுக பூத்எஜெண்டுகள் கோஷம் எழுப்பினர்.
இதையடுத்து சேகருடன் வந்த திமுகவினரும் திமுக பூத் ஏஜெண்டுகளும் ஜெயலலிதாவுக்கும் அதிமுகவுக்கும்எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அந்த வாக்குச் சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கலவரம் ஏதும் மூண்டுவிடுமோ என வாக்களிக்க வந்த பொது மக்களும் வாக்குச் சாவடி அதிகாரிகளும் அஞ்சினர்.
ஆனால், உடனடியாக வாக்குச் சாவடிக்கு வெளியில் நின்றிருந்த போலீசார் உள்ளே விரைந்து வந்துஅனைவரையும் அமைதிப்படுத்தினர்.
இத்தனைக்கும் இடையிலும் வைகை சேகர் எந்தவிதமான டென்சனும் காட்டாமல் அமைதியாகவாக்களித்துவிட்டுப் போனார்.
வைகை சேகருக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. அவர் வாக்களிக்க வந்தபோது இந்தபோலீசார் வாக்குச் சாவடிக்குள்ளேயும் பாதுகாப்புக்கு உடன் வந்தனர்.
அவரது காருக்கு முன்னும் பின்னும் வேன்களில் ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்புக்கு வந்தனர்.