கள்ள ஓட்டுப் போட வந்த அதிமுகவினர்
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டியில் கள்ள ஓட்டுப் போடுவதற்காக ஆட்களுடன் வந்த அதிமுகவினரின் வாகனங்களை போலீசார்தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
ஆண்டிப்பட்டியில் நேற்று (வியாழக்கிழமை) இடைத் தேர்தல் நடந்தது. இதில் கள்ள ஓட்டு மற்றும் வன்முறைச்சம்பவங்களைத் தடுப்பதற்காக போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
அதில் ஒரு பகுதியாக ஆண்டிப்பட்டி தொகுதியைச் சுற்றிலும் உள்ள 8 இடங்களில் சோதனைச் சாவடிகள்அமைக்கப்பட்டிருந்தன. அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஆயுதம் தாங்கி போலீசார், கும்பலாக ஆட்களுடன் வரும்கார்கள், வேன்கள் போன்ற வாகனங்களைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
அவ்வாறு திருப்பி அனுப்பப்பட்ட வேன்களில் பல அதிமுகவினருக்குச் சொந்தமானவை. அந்த வேன்களில்வந்தவர்கள், அதிமுகவிற்காக ஓட்டுப் போடப் போகிறோம். எங்களது வாகனங்களைத் தடுக்காதீர்கள் என்றுபோலீசாரிடம் கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் அவர்கள் கள்ள ஓட்டுப் போட வந்தவர்கள்தான் என்பதை அறிந்த போலீசார் அவர்களை ஆண்டிப்படிக்குஉள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. இதுபோல கிட்டத்தட்ட 30க்கும் மேற்பட்ட வேன்கள் மற்றும் கார்களைப்போலீசார் திருப்பி அனுப்பினர்.
அதேபோல முறையான வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் ஆண்டிப்பட்டிக்குள் நுழைய முயன்றவெளியூர்காரர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர்.