அமைதியில் ஆண்டிப்பட்டி: நிம்மதியில் மக்கள்
ஆண்டிப்பட்டி:
கடந்த 3 மாத காலமாக பெரும் பரபரப்புடன் காணப்பட்ட ஆண்டிப்பட்டியில் இன்று அமைதி திரும்பியது.
எந்தப் பக்கம் திரும்பினாலும் குழாய் மைக்குகளும், ஆளுயர ஸ்பீக்கர்களும் இந்தப் பகுதி மக்களின் காதுகளைபதம் பார்த்து வந்தன.
கரை வேட்டிகளின் சலசலப்பு, வண்ண வண்ண போஸ்டர்கள், தேர்தல் விளம்பரங்களால் நாறிப் போன சுவர்கள்,வெள்ளை அம்பாசிடர்கள், டயோடா குவாலிஸ்கள், டாடா சுமோக்களின் விர்... விர்... என ஆண்டிப்பட்டி பெரும்பரபரப்பாக இருந்து வந்தது.
மைக் கட்டிய ஆட்டோக்கள் சந்து பொந்துகளிலும இண்டு இடுக்குகளிலும் கூட நுழைந்து சுற்றிக் கொண்டிருந்தன.
இப்போது கரை வேட்டிகளைக் காணவில்லை. மிக சுறுசுறுப்பாக இயங்கி வந்த டீக் கடைகள், ஹோட்டல்களில்பிசினஸ் டல் அடிக்க ஆரம்பித்துவிட்டது.
ஆனாலும் தேர்தல் முடிவு வெளிவரும்போது ஏதாவது வன்முறைச் சம்பவங்கள் நேரலாம் என்ற அச்சம் நிலவுகிறது.இதனால் தேர்தல் பாதுகாப்புக்கு வந்த பெரும்பாலான போலீசார் இன்னும் ஆண்டிப்பட்டியில் தான் தொடர்ந்துஉள்ளனர்.
தொகுதி முழுவதுமே போலீஸ் தலைகள் தெரிகின்றன.