For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அமெரிக்க நிருபர் தலையை வெட்டிக் கொலை

By Staff
Google Oneindia Tamil News

வாஷிங்டன்:

பாகிஸ்தானில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட நிருபர் டேனியேல் பேர்ல் கழுத்தை வெட்டிக்கொல்லப்பட்டுள்ளார்.

அவரை உயிருடன் மீட்க அமெரிக்காவும், பாகிஸ்தான் அரசும் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை.

அவர் கொல்லப்பட்டுவிட்டதற்கான வீடியோ ஆதாரம் கிடைத்திருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.கராச்சியில் உள்ள அமெரிக்கத் தூதரகத்திடம் பாகிஸ்தான் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த வீடியோவைத் தந்தார்.அவரிடம் இதை யார் தந்தார்கள் என்று தெரியவில்லை.

மும்பையில் இருந்து இந்தப் பிராந்திய செய்திகளை சேகரித்து வந்தவர் பியர்ல். பாகிஸ்தான் தீவிரவாதிகள் குறித்ததகவல் சேகரிக்க அவர் கராச்சி சென்றார். அங்கு அவருக்கு சிறப்புப் பேட்டி தருவதாகக் கூறி ஷேக் உமர் சயீத்தலைமையிலான தீவிரவாதிகள் பியர்லை வலைவிரித்துப் பிடித்தனர்.

பின்னர் ஈ-மெயில் மூலம் அமெரிக்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. ஆப்கானிஸ்தானில் பிடிபட்ட தலிபான்தீவிரவாதிகளை கொடுமைப்படுத்தக் கூடாது உள்ளிட்ட பல கோரிக்கைகளை இக் கும்பல் முன் வைத்தது.

அமெரிக்காவின் நெருக்குதலையடுத்து உமர் சயீதை பாகிஸ்தான் அரசு கைது செய்தது. அவன் டேனியல் பியர்ல்கொல்லப்பட்டுவிட்டதாக போலீசாரிடம் கூறினான். ஆனால், இதை யாரும் நம்பாமல் இருந்து வந்தனர்.

ஆனால், இப்போது கிடைத்துள்ள வீடியோவில் டேனியேல் பியர்லை தீவிரவாதிகள் மிகக் கொடுமையாகத்தாக்குவதும் அவர் சுருண்டு விழுவதும் காட்டப்பட்டது. பின்னர் அவர் வீடியோவில் பேசுமாறு கூறப்படுகிறார்.அவர் வீடியோவைப் பார்த்தவண்ணம் பேசிக் கொண்டிருக்கும்போதே அவரது தலையை ஒரு தீவிரவாதிவெட்டுகிறான். ஒரே வெட்டில் அவரது துண்டாகி விழுகிறது.

அத்துடன் அந்த வீடியோ முடிகிறது. தீவிரவாதிகளின் முகங்கள் முகமூடியால் மறைக்கப்பட்டுள்ளன.

இவரைக் கடத்திய உமர் சயீத் டெல்லி திகார் சிறையில் இருந்தவன். இந்திய விமானம் நேபாளத்தில் இருந்துகடத்திச் செல்லப்பட்டபோது இவனையும், ஜெய்ஷ்-ஏ-முகம்மத் அமைப்பின் தலைவன் மெளலானா முகம்மத்அஸார் ஆகியோரை இந்தியா விடுவித்தது.

ஐ.எஸ்.ஐ. மற்றும் தலிபான் உதவியுடன் விமானக் கடத்தல் நடத்தி இந்தத் தீவிரவாதிகளை பாகிஸ்தான் அரசு தான்மீட்டது. இந்தத் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் மிகச் சுதந்திரமாக செயல்பட்டு வந்தனர். ஆனால், தீவிரவாதத்துக்குஎதிரான போரில் பாகிஸ்தானைத் தான் அமெரிக்கா தூக்கி வைத்து ஆடி வந்தது.

இப்போது பாகிஸ்தானின் தீவிரவாதத்துக்கு தனது நாட்டு நிருபரையே இழந்துள்ளது. இனிமேலாவதுதீவிரவாதிகள் விஷயத்தில் பாகிஸ்தானை அமெரிக்கா முறையாக கையாளும் என்று நம்பலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X