வாக்களிக்க கூடுதல் ஆவணங்கள்: தேர்தல் கமிஷன் மீது கருணாநிதி கோபம்
சென்னை:
ஆண்டிப்பட்டி வாக்காளர்கள் வாக்களிக்க 2 கூடுதல் ஆவணங்களை வழங்க தமிழக தேர்தல் கமிஷன் எந்தகட்சியின் கோரிக்கைப்படி அனுமதியளித்தது என்று திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
வாக்காளர்கள் வாக்களிக்க 16 ஆவணங்களை மத்திய தேர்தல் கமிஷன் அறிவித்திருந்தது. ஆண்டிப்பட்டியில்ஆயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் பெயர்கள் விலக்கப்படாமல் வாக்காளர் பட்டியலில் இருந்தன.
அவர்களிடம் 16 ஆவணங்களில் ஏதாவது ஒன்று இருக்க வேண்டும். அது இல்லாத காரணத்தால் தேர்தல் கமிஷன்,ஆளுங்கட்சியின கட்டளைக்கு இணங்க அவசர அவசரமாக 19ம் தேதி ஒரு புதிய ஆணை பிறப்பித்தது.
இந்த ஆணையின் படி 16 ஆவணங்களில் ஒன்று கூட இல்லாவிட்டாலும், கிராம நிர்வாக அதிகாரியிடம் ஒருசான்றிதழ் பெற்று வந்தாலே வாக்களிக்கலாம் என்று அந்த ஆணையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் குடிசை வாரியம்அளித்துள்ள அட்டையை காண்பித்தாலும் வாக்களிக்கலாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இந்த உத்தரவுகள் மத்திய தேர்தல் கமிஷனின் அனுமதி பெற்றதாக கூறப்படுகிறது. மத்திய தேர்தல் கமிஷன்எப்போது இந்த அனுமதியை அளித்தது? யாருடைய அல்லது எந்த கட்சியின் கோரிக்கையின் படி தமிழக தேர்தல்கமிஷன், மத்திய தேர்தல் கமிஷனை இவ்வாறு கேட்டுக் கொண்டது?
தேர்தலுக்கு முதல் நால் இப்படி ஒரு அவசர அறிவிப்பு வெளியிடக் காரணம் என்ன? இந்த அறிவிப்பு போலிவாக்களார்களுக்கு, கிரமா அதிகாரிகள் மூலம் உண்மை வாக்காளர்கள் என்று உயிர் ஊட்டத் தானே? இதற்கு உரியஇடத்தில் விளக்கமளிக்க தேர்தல் கமிஷன்கள் கடமைப்பட்டிருக்கின்றன.
இந்த அறிவிப்பில் ஆண்டிப்பட்டி சட்டசபை தொகுதிக்கு என்று மட்டுமே குறிப்பிட்டிருப்பது நெருப்புக் கோழிபுதருக்குள் தலையை மட்டும் மறைத்துக் கொண்டு, உடல் முழுமையும் மறைத்துக் கொண்டதாக நினைக்கும்மூடத்தனத்துக்கு சிறிதும் குறைந்ததாக தெரியவில்லை என்று அந்த அறிக்கையில் கருணாநிதி கூறியுள்ளார்.