For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குப்பையில் தீ: எரிந்தது கூவம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் கூவம் ஆற்றில் கொட்டப்பட்டிருந்த குப்பையில் தீப்பற்றிக் கொண்டதால் ஆற்றில் தீப்பிடித்தது.தீயணைப்புப் படை வீரர்கள் உடனடியாக விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சென்னையின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் ஒன்று கூவம் ஆறு. அந்தக் காலத்தில் ஆறாக ஓடிய கூவம்இப்போது மூக்கைத் துளைக்கும் சாக்கடையாக மாறியுள்ளது.

கூவத்தில் குப்பைகளைக் கொட்டுவது சென்னை வாசிகளின் வழக்கம். அதிலும் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில்கூவமா அல்லது குப்பையா என்று தெரியாத அளவுக்கு, அளவுக்கு அதிகமாகவே குப்பைகளைக் கொட்டுவார்கள்.

இந்தக் குப்பைகள் மலை மேடுகளாக காணப்படும். சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் உள்ள பல கார், மோட்டார்சைக்கிள் மெக்கானிக்குகள் தங்களது ஷாப்களில் சேரும் எண்ணெய் போன்ற கழிவுகளை கூவத்தில் கொட்டுவதுவழக்கமாம்.

இந்த நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் வாக்கில் இந்தக் குப்பை மேட்டில் திடீர் என தீப்பிடித்துக்கொண்டுள்ளது. கூவம் ஆற்றில் திடீரென தீப்பிடித்துக் கொண்டதைப் பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்புப்படையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கூவத்தில்தீப்பிடித்ததால் சிந்தாதிரிப்பேட்டையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X