இது சாதாரண வெற்றி அல்ல... இது ஒரு வரலாறு: ஜெ. உணர்ச்சிப் பேச்சு
சென்னை:
என் வாழ்நாளிலேயே மிக முக்கியமான பிறந்த நாள் இது என ஜெயலலிதா கூறினார்.
ஆண்டிப்பட்டியில் வெற்றி பெற்றதையடுத்து போயஸ் கார்டனில் நிருபர்களைச் சந்தித்த ஜெயலலிதா கூறியதாவது:
இன்று ஆண்டிப்பட்டியில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறோம். என் வாழ்நாளிலேயே எனக்குக் கிடைத்த மிகசிசிறந்த பிறந்த நாள் பரிசு இது தான். இதற்காக ஆண்டிப்பட்டி மக்களுக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஆண்டிப்பட்டியை தமிழகத்திலேயே மிகச் சிறந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவேன். அதே போல தமிழகத்தைஅனைத்துத் துறைகளிலும் முதன்மையான மாநிலமாக மாற்றிக் காட்டுவேன். அதுவரை நான் ஓய மாட்டேன்.
கருணாநிதியின் சதிகளைத் தோற்கடித்து எனக்கு இந்த வெற்றி தேடித் தந்த அதிமுக தொண்டர்களுக்கும்மக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் போன்ற வேதனைகளை, சோதனைகளை, துயரங்களை இந்த நாட்டில், ஏன் இந்த உலகத்திலேயே வேறுஎந்த அரசியல் தலைவரும் சந்தித்தித்திருக்க மாட்டார். அவ்வளவு பிரச்சனைகளையும் தாண்டி இன்று வென்றுகாட்டியுள்ளேன். இனிமேலும் வருகிற எல்லா பிரச்சனைகளையும் முழுத் தெம்போது எதிர்த்து நிற்பேன். நிச்சயம்வெல்வேன்.
எந்தக் கட்சியின் துணையும் இல்லாமல் வென்று காட்டியுள்ளோம். இனியும் அதிமுகவின் வெற்றிகள் தொடரும்.
5 ஆண்டுகளுக்கு முன் எனது வரலாறும், அதிமுகவின் கதையும் முடிந்து விட்டது என அனைவரும் கூறினார்கள்.அது தவறு என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறோம்.
இந்த வெற்றி ஒரு வரலாறு. இந்த வரலாறு எதிர்காலத்தில் துன்பங்களைச் சந்திப்பவர்களுக்கு ஒரு பாடம்.விரக்தியின் விளிம்புக்குச் செல்பவர்களுக்கு, துயரங்களை, வேதனைகளைச் சந்திப்பவர்களுக்கு மீண்டும் வாழ்வில்நம்பிக்கை ஏற்பட என் வாழ்க்கை ஒரு பாடமாக அமையும் என்றார் ஜெயலலிதா.