இன்றே ராஜினாமா செய்கிறார் பன்னீர்: மாலையில் எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சென்னை:
ஆண்டிப்பட்டியில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வெற்றி பெற்றுவிட்டதால் முதல்வர் பன்னீர்செல்வம்தனது பதவியை இன்று ராஜினாமா செய்கிறார்.
இன்று மாலை அதிமுக தலைமையகத்தில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடக்கிறது. இதில் ஜெயலலிதா மீண்டும்முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்படவுள்ளார்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி இன்று அதிமுக தலைமையகத்தில் நடந்த விழாவில் முதல்வர்பன்னீர்செல்வம் 54 கிலோ எடையுள்ள கேக்கை வெட்டினார். தலைமை நிலையச் செயலாளர் புலமைப்பித்தன்எழுதிய என் பாட்டுடைத் தலைவி என்ற நூல் வெளியிடப்பட்டது.
இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய பன்னீர்,
நாங்கள் ஏற்கனவே கூறியபடி ஜெயலலிதா 1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். இதையடுத்து நான்இன்றே ஆளுநரைச் சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தைத் தர இருக்கிறேன்.
எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகத்தேர்ந்தெடுக்கப்படவுள்ளார் என்றார்.