உ.பியில் படுதோல்வியை நோக்கி பா.ஜ.க.
டெல்லி:
கடந்த வாரம் தேர்தல் நடந்த உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தராஞ்சல், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் வாக்குஎண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.
மிக பலத்த பாதுகாப்புடன் இந்த வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.
உத்தரப் பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன்சமாஜ் கட்சி முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் சமாஜ்வாடிகட்சி உள்ளது. இந்த மாநிலத்தில் பா.ஜ.க. 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இங்கு ஆளும் கட்சியாக இருந்தபா.ஜ.கவுக்கு பெரும் தோல்வி கிடைத்து வருகிறது.
பஞ்சாபில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. ஆளும் கூட்டணியான அகாலிதளம்-பா.ஜ.க இரணடாவதுஇடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைப் பிரித்து உருவாக்கப்பட்ட புதிய மாநிலமான உத்தராஞ்சலில் பா.ஜ.க. முன்னிலையில்உள்ளது. காங்கிரஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் நடக்கும் முதல் சட்டசபைத் தேர்தல் இது.