ஸ்டாலின் மகன் திருமணம் நடந்தது
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும் ஸ்டாலினின் மகனுமான உதயநிதியின் திருமணம் இன்று சென்னையில்நடந்தது.
அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கருணாநிதி முன்னிலையில் இந்தத் திருமணம் நடந்தது.உதயநிதியும், அவருடன் கல்லூரியின் பயின்ற கிருத்திகாவும் காதலித்து திருமணம் கொண்டுள்ளனர்.
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் தாலி எடுத்துத் தர மிக எளிமையாக சுயமரியாதை வழக்கப்படி இத்திருமணம் நடந்தது.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள்அமைப்பின் தலைவர் திருமாவளவன், சமீபத்தில் பாஜகவில் இணைந்த திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ்முன்னாள் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி உள்பட ஏராளமான அரசியல் தலைவர்கள் இந்தத் திருமண விழாவில்கலந்து கொண்டனர்.
மேலும் ரஜினிகாந்த், கமலஹாசன், கவிஞர் வைரமுத்து, கவிஞர் வாலி உள்பட ஏராளமான திரையுலகக்கலைஞர்களும் உதயநிதியின் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
இத் திருமணத்தையொட்டி தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான திமுகவினரும், திமுக இளைஞர்அணியினரும் அறிவாலயத்தில் குவிந்துள்ளனர்.
முன்னதாக நேற்று மாலை நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் ராம்மோகன் ராவ், ப.சிதம்பரம் ஆகியோர் உதயநிதி-கிருத்திகா தம்பதியை வாழ்த்தினார்.