ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு: ஜோதிடர் ஆலோசனைப்படி புதன்கிழமை ஜெ. பதவியேற்பு
சென்னை:
தமிழகத்தின் 19வது முதல்வராக ஜெயலலிதா நாளை மறுதினம் (புதன்கிழமை) பதவியேற்பார் என்று தெரிகிறது.
அவரது பிறந்த நட்சத்திரமான மாசிமகம் அன்றைய தினம் வருகிறது. எனவே அந்த தினத்தில் பதவியேற்குமாறுகேரள ஜோதிடர் ஜெயலலிதாவுக்கு அறிவுறுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்பதற்கு வசதியாக முதல்வர் பன்னீர்செல்வம் தனது அமைச்சரவையுடன்ராஜினாமா செய்தார். ஜெயலலிதாவை எம்.எல்.ஏக்கள் சட்டசபைக் கட்சித் தலைவராக தேர்வு செய்ததற்கானகடிதத்தையும் அவர் ஆளுநர் ராம்மோகன் ராவிடம் வழங்கினார்.
இதையடுத்து ஜெயலலிதாவை ஆட்சியமைக்க வருமாறு ஆளுனர் ராம்மோகன் ராவ் அழைப்பு விடுத்துள்ளார்.
விரைவில் ஆளுநரைச் சந்தித்து புதிய அமைச்சரவைப் பட்டியலைத் தந்துவிட்டு பின்னர் ஜெயலலிதா முதல்வராகப்பதவியேற்பார். அவருடன் புதிய அமைச்சரவையும் பதவியேற்கும்.
சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபம் அல்லது மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாநடைபெறலாம் என்று தெரிகிறது.
அடுத்த அமைச்சரவை பதவியேற்கும் வரை ஆட்சிப் பொறுப்பில் இருக்குமாறு பன்னீர்செல்வத்திடம் ஆளுநர்கோரியுள்ளார்.