பீகாரில் லாலு தலைமையில் ஜெயாவுக்கு பாராட்டு விழா!
சென்னை:
மீண்டும் முதல்வராகப் பதவியேற்கும் ஜெயலலிதாவுக்கு பீகாரில் பாராட்டு விழா நடத்த அம்மாநில முதல்வர் ராப்ரிதேவியும் அவரது கணவர் லாலு பிரசாத் யாதவும் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தமிழக ராஷ்டீரிய ஜனதா தளத் தலைவர் கேசவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஒரு அரசியல் தலைவருக்கு எந்தெந்த வகையில் பிரச்சனைகள் ஏற்படுத்த முடியுமோ, அனைத்து வழிகளிலும்ஜெயலலிதாவுக்கு பிரச்சனைகளை ஏற்படுத்தினர் முன்பு ஆட்சியில் இருந்தவர்கள்.
ஜெயலலிதாவை அரசியலில் இருந்து அஸ்தமனம் செய்கிற முயற்சியிலும் பல அரசியல் தலைவர்கள் ஒன்று கூடிமுயற்சித்தனர்.
அவை அனைத்தையும் ஆண்டிப்பட்டி இடைத்தேர்தல் மூலம் மக்கள் சக்தியை ஒன்று திரட்டி, அவர்களின்சூழ்ச்சியை தூள் தூளாக்கிவிட்டார் ஜெயலலிதா.
முதல்வராக பதவியேற்க உள்ள ஜெயலலிதாவுக்கு, தேசிய தலைவர் லாலு பிரசாத்தின் ராஷ்டீரிய ஜனதா தளத்தின்சார்பில் மனமாற வாழ்த்துகிறேன்.
விரைவில் பீகார் மாநில தலைநகர் பாட்னாவில், அம்மாநில முதல்வர் ராப்ரி தேவி தலைமையில் ஜெயலலிதாவுக்குபாராட்டு கூட்டம் நடத்தப்படும் என்று கேசவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications