ராமநாதபுரத்தில் ரூ.1 கோடி மதிப்பு போதைப் பொருள் பறிமுதல்
ராமநாதபுரம்:
ராமநாதபுரத்தில் உள்ள ஒரு லாட்ஜில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையின்போது, ரூ.1 கோடி மதிப்புள்ள 75 கிலோகொக்கைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, இது தொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
வேறு ஒரு நாட்டிலிருந்து கடத்தப்பட்டு கொண்டுவரப்பட்ட இந்த கொக்கைன் போதைப் பொருளை மற்றொருநாட்டுக்குக் கடத்த முயற்சி செய்து கொண்டிருந்தபோதுதான் அது கைப்பற்றப்பட்டது.
கொக்கைன் போதைப் பொருள் நம் நாட்டில் பயிரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தகவல்களைத் தெரிவித்த கஸ்டம்ஸ் கமிஷனரான அஜித் குமார், தமிழகத்தில் ஹெராயின் போதைப் பொருள்கடத்தப்படுவது பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
பெரும்பாலும் இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையேதான் இந்த ஹெராயின் கடத்தப்படுவதால் அங்கு தீவிரப்பாதுகாப்பு போடப்பட்டதையடுத்து, இந்தக் கடத்தல் குறைந்துள்ளது என்றும் அஜித் குமார் குறிப்பிட்டார்.