For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையை மறைத்த பனிமூட்டம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை நகரில் இன்று (வியாழக்கிழமை) காலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் 8 மணிவரையிலும் நகரத்தை பனிக் கூட்டம் சூழ்ந்திருந்தது.

வழக்கமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில்தான் பனிமூட்டம் ஏற்படும். ஆனால் சென்னையில் கடந்த சிலநாட்களாகவே அதிகாலையில் பனி மூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. வியாழக்கிழமை இது அதிக அளவில்காணப்பட்டது.

காலை 8 மணி வரையிலும் பனி மூட்டம் இருந்ததால் எதிரில் வருபவர் யார் என்றே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் அடர்த்தியாக இருந்தது.

8 மணிக்கு மேல் வெயில் வரத் தொடங்கியதால் பனி மூட்டம் கலைந்து சென்றது. சமீபத்தில் பனிமூட்டத்தால்விமானப் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X