For Daily Alerts
Just In
சென்னையை மறைத்த பனிமூட்டம்
சென்னை:
சென்னை நகரில் இன்று (வியாழக்கிழமை) காலை கடுமையான பனி மூட்டம் காணப்பட்டது. இதனால் 8 மணிவரையிலும் நகரத்தை பனிக் கூட்டம் சூழ்ந்திருந்தது.
வழக்கமாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில்தான் பனிமூட்டம் ஏற்படும். ஆனால் சென்னையில் கடந்த சிலநாட்களாகவே அதிகாலையில் பனி மூட்டம் அதிக அளவில் காணப்படுகிறது. வியாழக்கிழமை இது அதிக அளவில்காணப்பட்டது.
காலை 8 மணி வரையிலும் பனி மூட்டம் இருந்ததால் எதிரில் வருபவர் யார் என்றே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் அடர்த்தியாக இருந்தது.
8 மணிக்கு மேல் வெயில் வரத் தொடங்கியதால் பனி மூட்டம் கலைந்து சென்றது. சமீபத்தில் பனிமூட்டத்தால்விமானப் போக்குவரத்து 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Story first published: Thursday, February 28, 2002, 5:30 [IST]