For Daily Alerts
Just In
முதல்வராகும் முன் குருவுக்கு ஜெ. மரியாதை
சென்னை:
அதிமுக தலைமைக் கழக வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாநாளை (வெள்ளிக்கிழமை, மார்ச் 1) மாலை அணிவிக்கவுள்ளார்.
மார்ச் 1ம் தேதி மாலை 5 மணியளவில் தலைமைக் கழகத்திற்கு ஜெயலலிதா வருகிறார். கழக வளாகத்தில் உள்ளஎம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து வணங்குகிறார்.
2ம் தேதி முதல்வராகப் பதவியேற்கவுள்ளதையொட்டி எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க வருகிறார்ஜெயலலிதா.
வழக்கமாக சென்னை அண்ணாசாலையில் உள்ள உள்ள சிலைக்கு தான் அவர் மாலை அணிவிப்பது வழக்கம்.ஆனால் பொது இடங்களில் ஊர்வலம், கூட்டங்கள் நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதால் கட்சிஅலுவலகத்தில் உள்ள சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார் என்று கூறப்படுகிறது.
Comments
Story first published: Thursday, February 28, 2002, 5:30 [IST]