காஞ்சி சுவாமிகளுக்கு கொலை மிரட்டல்: பலத்த பாதுகாப்பு
காஞ்சிபுரம்:
குஜராத்தில் பயங்கர மத வன்முறையைத் தொடர்ந்து, காஞ்சி சுவாமிகளுக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள்வந்து கொண்டிருப்பதையடுத்து அவருக்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள காஞ்சி மடத்தின் அலுவலகத்துக்கு கடந்த மார்ச் 1ம் தேதி ஒருவன் போன் செய்து,விஜயேந்திர சுவாமிகள் எங்கே உள்ளார் என்பது குறித்துக் கேட்டுவிட்டு வைத்து விட்டான்.
பின்னர் மீண்டும் அதே குரலில் ஒரு போன் வந்தது. மிரட்டல் விடுக்கும் தொணியில் அந்த நபர் பேசியதையடுத்துகாஞ்சி மடம் பரபரப்படைந்தது. இதையடுத்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து காஞ்சி சுவாமிகளான ஜெயேந்திர சுவாமிகள் மற்றும் விஜயேந்திர சுவாமிகள் ஆகியோருக்குப்பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி. மாசான முத்து இன்று காலை காஞ்சி சுவாமிகளைச்சந்தித்துப் பேசினார்.
காஞ்சிபுரம் மற்றும் சென்னையில் உள்ள காஞ்சிபுரம் மடங்களில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காகக்குவிக்கப்பட்டுள்ளனர்.