For Daily Alerts
Just In
வாலி கோவிலில் பஞ்ச லோக சிலைகள் திருட்டு
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரம் என்ற இடத்தில் உள்ள வாலீஸ்வரர் கோவிலில் 5 பஞ்சலோக சிலைகள் திருட்டுப்போயின.
ராமாயணத்தில் வரும் வாலிக்கு வாலிகண்டபுரத்தில் கோவில் உள்ளது. சோழர் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டது. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் தற்போது கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
கோவிலைச் சுற்றிலும் கட்டைகளைக் கட்டி புனரமைப்பு வேலைகள் நடந்து வருகின்றனர். இந்த கட்டைகள் வழியாக சிலதிருடர்கள் கோவிலுக்குள் நுழைந்து அங்கிருந்த 5 பழங்கால பஞ்சலோக சிலைகளை திருடிச் சென்று விட்டனர்.
இந்த சிலைகள் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ளவை.
சிலைகளைத் தேட தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன். மோப்ப நாய்களும்சோதனையில் ஈடுபடுத்தப்பட்டன.
Comments
Story first published: Monday, March 4, 2002, 5:30 [IST]