அமைதியைக் கெடுக்காதீர்கள்: ரணில் வேண்டுகோள்
கொழும்பு:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை குறை செல்வதன் மூலம், அமைதி பேச்சு வார்த்தையை கெடுக்காதீர்கள் என்றுநாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகளுக்கு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த ஒப்பந்தத்தில் சில பகுதிகள் இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் வகையில் இருப்பதால் அதை ரத்துசெய்ய போவதாக அதிபர் சந்திரிகா சமீபத்தில் அறிவித்தார்.
2 சிங்கள கட்சிகளும் இந்த ஒப்பந்தத்திற்கு எதிராக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளன. இந்நிலையில்இன்று நாடாளுமன்றத்தில் ரணில் கூறியதாவது:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை குறை கூறுவதன் மூலம் அமைதி பேச்சுவார்த்தையை கெடுக்கும் முயற்சிகளில் சிலர்ஈடுபட்டுள்ளனர். இதே போல் தான் 1989ல் இந்தியா சமாதான பேச்சுவார்த்தை நடத்த முன் வந்தபோதுஅவர்களை குறை கூறி வெளியேற்றினீர்கள்.
அதே போல் நார்வே தூதுக்குழுவின் நடவடிக்கைகளையும் குறை கூறி விரட்டியடிக்காதீர்கள்.
நிரந்தர போர் நிறுத்தம் இருந்தாலும் ராணுவம் உஷார் நிலையிலேயே உள்ளது. அதனால் இலங்கையின்பாதுகாப்புக்கு எந்த பாதிப்பும் வராது.
இரு தரப்பினரையும் பிரிக்கும் எல்லைகளை நிர்ணயிப்பதில் நார்வே குழு உதவி தான் செய்கிறது. அந்தஎல்லைகளே கடைசி வரை கடைபிடிக்கப்படும் என்ற கருத்து உண்மையல்ல.
இந்த ஒப்பந்தத்தை காப்பாற்ற, இலங்கை அரசு பொறுப்புடனும், முன்னெச்சரிக்கையுடனும் நடந்து கொள்ளும்என்றும் விக்கிரமசிங்கே கூறினார்.