For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

போலி முத்திரை தாள்கள் விற்ற 4 பேர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

போலி முத்திரைத் தாள்களை அச்சடித்து விற்பனை செய்த 4 பேரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.

போலி முத்திரைத்தாள்கள் பெருமளவில் விற்கப்படுவதாக நிறைய புகார்கள சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு புகார்கள்வந்தன. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கினர்.

இதில் கருணாமூர்த்தி, சண்முகம் என்ற இருவர் சிக்கினர். இவர்களிடம் இருந்து ரூ.5,000 மதிப்புள்ள 80 போலிமுத்திரைத் தாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணையில் புரோக்கர் பாண்டியன் மற்றும் சங்கர் என்ற இருவரை போலீசார் கைதுசெய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.1,000 மதிப்புள்ள 125 போலி முத்திரைத்தாள்களும் கைப்பற்றப்பட்டன.

இவர்களுக்கு முத்திரைத்தாள்கள் அச்சடித்துக் கொடுத்த நரேஷ் குமார் தலைமறைவாகி விட்டார். இந்த 4 பேரிடமும்பறிமுதல் செய்த முத்திரைத்தாள்கள் ரூ.15 லட்சம் மதிப்புடையது என்று போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 3 ஆண்டுகளாக இந்த கும்பல் பல இடங்களில் போலி முத்திரைத்தாள்களை விற்று வந்துள்ளனர். பிடிபட்ட 4பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X