திமுகவுக்கு சுயமரியாதை உள்ளதா? சுவாமி சந்தேகம்
சென்னை:
முன்னுக்குப் பின் முரணாக பேசி வரும் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என ஜனதாகட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி கூறினார்.
சென்னை சாந்தோமில் உள்ள தனது இல்லத்தில் நிருபர்களிடம் சுவாமி கூறியதாவது:
அடிக்கடி சுயமரியாதை பேசி வரும் கட்சி திமுக. இந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் அன்பழகனும், இந்தக்கட்சியின் தலைவர் கருணாநிதியின் மகன் ஸ்டாலினும் ஜெயலலிதா பதவியேற்பு விழாவுக்குச் சென்றபோது 5வதுவரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக உட்கார வைக்கப்பட்டனர்.
சுயமரியாதை இருந்திருந்தால் இந்த அவமரியாதையை எதிர்த்து அன்பழகனும் ஸ்டாலினும் அந்த நிகழ்ச்சியைவிட்டு வெளியேறி இருக்க வேண்டும். வெளிநடப்பு செய்து தங்கள் எதிர்ப்பைக் காட்டியிருக்க வேண்டும். ஆனால்,அதைச் செய்யவில்லை. இதனால், திமுக சுயமரியாதை பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
திமுக தலைவர் கருணாநிதி முன்னுக்குப் பின் முரணாக பேச ஆரம்பித்துவிட்டார். அவர் பேசாமல் அரசியலில்இருந்து ஓய்வு பெற்றுக் கொள்வது நல்லது.
ஜெயலலிதா முதல்வராகிவிட்டதால் தமிழகத்துக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை. விரைவில் மாபெரும்நிதி நெருக்கடியில் தமிழகம் சிக்கப் போகிறது. அதை ஜெயலலிதாவால் நிச்சயம் சமாளிக்க முடியாது.
பா.ஜ.க.- அதிமுக கூட்டணி எல்லாம் வராது.
அயோத்தி நகர் முழுவதையும் சர்ச்சைக்குறிய பகுதியாக அறிவிக்க வேண்டும். அங்குள்ள விஸ்வ ஹிந்து பரிஷத்தலைவர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும்.
தமிழகத்தில் சைதாப்பேட்டை, வாணியம்பாடி இடைத் தேர்தல்களில் ஜனதா கட்சி நிச்சயம் போட்டியிடும் என்றார்சுவாமி.