தபால்பெட்டியில் துப்பாக்கிக் குண்டுகளுடன் கிடந்த வீரப்பனின் கடிதம்
கோயம்புத்தூர்:சிறுமுகையில் உள்ள ஒரு தபால் பெட்டியில் ஒரு கவரில் 5 புல்லட்டுகளுடன், ஒரு கடிதமும் போடப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் சிறுமுகையில் உள்ள ஒரு தபால் பெட்டியில் இந்த கவர் இருந்துள்ளது. எப்போதும்போல் போஸ்ட் மேன் இந்த பெட்டியை திறந்து அந்த கவரை எடுத்துள்ளான்.
ஆனால் இந்த கவரில் அனுப்புனர் முகவரியும், பெறுபவர் முகவரியும் இல்லாததால் இந்த கடிதத்தை போஸ்ட்மாஸ்டரிடம், போஸ்ட் மேன் கொடுத்துள்ளான்.
போஸ்ட்மாஸ்டர் சந்தேகம் அடைந்து அந்த கவரை போலீஸிடம் ஒப்படைத்துள்ளார். போலீசார் அதை திறந்துபார்த்த போது அந்த கவரில் ஒரு கடிதமும், 0.22 ரக தோட்டாக்கள் 5 இருந்துள்ளது.
அந்த கடிதத்தில் வீரப்பனுக்கு உடல் நிலை பாதிப்படைந்துள்ளதாகவும், இந்த கடிதத்தை கொண்டு வருபவரிடம்மருந்து வாங்குவதற்கு பணத்தை கொடுக்குமாறும் யாரோ எழுதியுள்ளனர்.
இந்த கடிதத்தை வீரப்பனின் கூட்டாளிகள் எழுதி, அனுப்பியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்தகடிதம் தொடர்பாக ஆயுதம் மற்றும் வெடிபொருட்கள் தடுப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்து கோயம்புத்தூர்போலீசார் விசாரித்து வருகின்றனர்.