For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கைதிகள் தப்பிய சம்பவம்: நீதி விசாரணை கேட்கிறது பா.ஜ.க.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

மதுரை அருகே 2 அல்-உம்மா தீவிரவாதிகள் தப்பிய சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றுபாரதீய ஜனதாக் கட்சியின் மாநில செயலாளர் எச். ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.

மதுரையை அடுத்த திருமங்கலம் போலீஸ் நிலையத்தில், டாடா சுமோ காரில் வந்த மர்ம நபர்கள் நாட்டுவெடிகுண்டுகளை வீசியும் போலீசாரைத் துப்பாக்கியால் சுட்டும் 2 அல்-உம்மா கைதிகளை மீட்டுச் சென்றனர்.

அவர்களைத் தேடும் பணியில் தமிழகப் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கோயம்புத்தூரில் நிருபர்களிடம் ராஜா கூறியதாவது:

இந்தச் சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்.

மேலும் இதுபோன்ற தீவிரவாதிகள் குறித்த விசாரணையை நடத்த தனி நீதிமன்றம் ஏற்படுத்தப்பட வேண்டும்என்றார் ராஜா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X