இனி கொழும்புவுக்கு தமிழர்கள் தடையின்றி செல்லலாம் !
கொழும்பு:
கொழும்புக்கு வரும் தமிழர்கள் குறித்த தகவல்களை போலீசாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு ரத்துசெய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
நேற்றுமுதல் இந்தக் கட்டுப்பாட்டை அரசு நீக்கியுள்ளது. குறிப்பாக நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இருந்து வரும்தமிழர்கள் குறித்து அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்து வந்தது.
இந்தக் கட்டுப்பாட்டை உடனடியாக ரத்து செய்யுமாறு கொழும்பு காவல்துறை தலைமையகத்துக்கு பாதுகாப்புஅமைச்சகத்திடம் இருந்து நேற்று உத்தரவு வந்தது.
விடுதலைப் புலிகளுடன் அரசு செய்துகொண்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து தமிழர்கள் மீதும், தமிழர்பகுதிகள் மீதும் இருந்த பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஜனதா விமுக்தி பெரமுனா தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை வரும் 19ம் தேதிநீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.