For Daily Alerts
Just In
குடியாத்தம்: சாக்கடையில் வீசப்பட்ட பெண் சிசு நாய் கடித்து சாவு
குடியாத்தம்:
குடியாத்தம் நகர சாக்கடையில் வீசப்பட்ட பெண் குழந்தை, நாய் கடித்து குதறியதால் இறந்தது.
வேலூர் மாவட்டம் குடிாயாத்தம் நகர சபை துப்புரவு தொழிலாளர்கள் அரசு மருத்துவமனை முன் உள்ளசாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு துணியில் சுற்றப்பட்டு ஒரு பெண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை நாய் கடித்து குதறியதால்இறந்துள்ளது. குறைப் பிரசவத்தில் பிறந்த இந்த குழந்தையை யாரோ அங்கு வீசி விட்டு சென்றுள்ளனர்.
இந்த குழந்தை யாருக்கு பிறந்தது என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
குடியாத்தத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் 4 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் குப்பைத் தொட்டிமற்றும் சாக்கடையில் வீசப்பட்டு கிடந்தது குறிப்பிடத்தக்கது.
Story first published: Monday, March 11, 2002, 5:30 [IST]