For Daily Alerts
Just In
போக்குவரத்து துறை தனியார் மயமாவதற்கு புதிய தமிழகம் எதிர்ப்பு
கோயம்புத்தூர்:
தமிழகத்தில் போக்குவரத்துத்துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் முயற்சிக்கு புதிய தமிழகம் கட்சித் தலைவர்டாக்டர் கிருஷ்ணசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரின் போது போக்குவரத்துத்துறை படிப்படியாக தனியார் மயமாக்கதமிழக அரசு முடிவெடுத்திருப்பதாக ஆளுநர் ராமமோகன் ராவ் தனது உரையில் கூறினார்.
இது குறித்து கோயம்புத்தூரில் செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி பேசுகையில்,
போக்குவரத்துத்துறையை தனியார் மயமாக்கும் தமிழக அரசின் முயற்சி கண்டனத்துக்குரியது.
பின் தங்கிய மக்களின் வேலைவாய்ப்பை இது பறிக்கும். ஏற்கனவே வேலை பார்த்து வரும் தொழிலாளர்களின்வேலை வாய்ப்புக்கு ஆபத்து ஏற்படும்.
மேலும் இம்முயற்சி ஊழலுக்கு வழி வகுக்கும் என்று கிருஷ்ணசாமி கூறினார்.
Story first published: Monday, March 11, 2002, 5:30 [IST]